எட்டுத்தொகையில் ஆடவர்
Thenmozhi, DR.D (2025) எட்டுத்தொகையில் ஆடவர். In: WORLD RECORD CONFERENCE 2025(200 DAYS-200 CONCEPTS-200 HOURS), 08-10-2025, ZOOM.
எட்டுத்தொகையில் ஆடவர் .....உரை.docx - Presentation
Download (94kB)
Abstract
வியத்தகு காட்சிகளையும், சிறந்த நீதிகளையும், தமது வாழ் வியல் முறைகளையும் தமது நினைவாற்றலுக்கு ஏற்ப மொழியின் துணைகொண்டு எடுத்துக்கூறி தாமும் இன்பம் துய்த்துப் பிறரையும் அனுபவிக்கச் செய்தனர். இவ்வித இன்ப பலத்தின் ஒரு நிலையே இலக்கியம் ஆகும். சிறந்த இலக்கியமானது எல்லோருக்கும் இன்பத்தைத் தருவதாக இருத்தல்வேண்டும். அத்தகையதே உண்மையான இலக்கியமாகும். தமிழின் முதல் இலக்கியமும் முதன்மை இலக்கியமுமான சங்க இலக்கியம், சங்ககால சமுதாய அரசியல், பொருளாதாரம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றின் ஆவணமாக இருந்து சங்க கால சமுதாயத்தை நம்முன் நிறுத்துகின்றது. இத்தகைய சங்க இலக்கியத்தில் தொகை நூல்களான எட்டுத் தொகை நூல்கள் வழியாக வெளிப்படும் ஆண் (ஆடவர்) எனும் சமுதாய அடிப்படைக் கூறின் இயல்பை,பாடல்களின் துணை கொண்டு இனங்காணும் நிலையில் இவ்வாய்வு அமைகின்றது. எட்டுத் தொகை நூல்களில் ஆடவர், இவர் பெறும் இடங்கள், அவர்தம் இயல்புகள், சமுதாயத்தில், அக, புற வாழ்வில் அவர்களுக்குரிய பங்குகள் பற்றியும் இவ்வாய்வு ஆராய்கின்றது.
| Item Type: | Conference or Workshop Item (Speech) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:13 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15330 |
